|
|
![]() ![]() |
||
![]() |
|||
நடிகர் விஜய்சேதுபதிக்கு இன்று (ஜனவரி 16) பிறந்த நாளாகும்.
இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் .நேற்று (ஜனவரி 15) இரவு சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படம் ஒன்று வெளியானது.
அதில்விஜய் சேதுபதி பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டுவது போன்று புகைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
அருகில் இயக்குநர் பொன்ராம் உள்ளிட்ட சிலர் இருந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த இப்புகைப்படத்தைப்பார்த்த பலரும் விஜய் சேதுபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.
கல்லூரி மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.கன்னட நடிகர் ஒருவரும் இதே விவாகரத்தில் சிக்கி சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விஜய்சேதுபதியின் மீது நடவடிக்கை பாயும் என்ற பேச்சு எழுந்தது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளதாவது,
“எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன்.
அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்..














