
மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்ந்த நாள்.
எத்தனை யுகமானாலும் தமிழர்களின் வரலாற்றில் இருந்து நீங்கப்பட முடியாத இனப்படு கொலை.
“நான்காம் விடுதலைப் போர் முடிவுற்றது. அதனுடைய பொருள் ஐந்தாம் விடுதலைப்போர் அடுத்துத் தொடங்கும் என்பதே!”என்று இன்றைய மக்கள் நீதி மய்ய பிரமுகர் பழ .கருப்பையா 26.5. 09 ‘தினமணி ‘நாளிதழில் எழுதிய கட்டுரையின் ஒரு சிறு பகுதி இன்றும் நினைவில்.!
அந்த கட்டுரையின் முடிவில் “ஈழம்தான் அற்றுப்போய் விட்டதா ,அல்லது காலம்தான் அற்றுப் போய்விட்டதா ?”என்று முடித்திருப்பார்.
ஆனால் துரோகம்தான் தொடர்கிறது.
இந்தியா முழுமையும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது பேமிலி மேன் என்கிற வெப் சீரியல்
பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நடிகை சமந்தா வெடிகுண்டு பெண்ணாக நடிக்கிறார் என்று சொன்னார்கள்.
அப்போதே சிறு பொறி தட்டியது. இது தமிழினத்தை குறி வைப்பதாக இருக்கக்கூடாது என்பதாக!
ஏனெனின் உலகமே அஞ்சியது விடுதலை புலிகளின் தற்கொலைப் படையின் வீரம் பற்றி.!
அந்த அளவுக்கு அவர்களின் இனவிடுதலை வேட்கை இருந்தது.
இன்று பேமிலி மேன் வெப் சீரியல் முன்னோட்டம் வெளியானது.
அதில் ,
” சமந்தா இலங்கைத் தமிழ் பேசுகிறார். அவர் இடம்பெறும் காட்சிகளில் அணிந்திருக்கும் சீருடை விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்திருக்கிறது. மேலும் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாக உள்ளது “என்றும் பலர் கொந்தளித்துள்ளனர்.
எனவே FamilyMan2_against_Tamils என்ற ஹாஷ்டாக் மூலம் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு இனத்தை சிறுமைப்படுத்துவதன் வழியாக சமந்தா எதை சாதிக்கப்போகிறார் என்பது தெரியவில்லை.!












