
தமிழ்ச்சினிமாவில் பிராஸ்தடிக் மேக்கப் என்கிற அறிய கலையை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன்தான்.!
தற்போது கமலின் வழியில் நடிகர் -இயக்குநர் பிரபுதேவாவும் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்.
நீண்ட கால விடுப்புக்குப்பின்னர் தமிழில் தலைகாட்டியிருக்கிறார் பிரபு தேவா..அதுவும் வித்தியாசமாக!
எந்த நடிகரும் செய்திராத வித்தியாசமான முயற்சி.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ‘பொய்க்கால் குதிரை’ என்கிற படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஹரஹர மகாதேவ் ,கஜினிகாந்த் ஆகிய படங்களை இயக்கியவர்தான் சந்தோஷ் பி ஜெயக்குமார்.
கதைப்படி விபத்தில் ஒரு காலை இழந்து விடுகிறார் பிரபு தேவா .பிராஸ்தடிக் கால் வைத்துக்கொண்டு வஞ்சம் தீர்ப்பதுதான் கதை.
பிரபுதேவாவின் காலை மடக்கி கட்டிவிட்டு அதில் பொய்யான காலை பொருத்தி விட்டார்கள். கடுமையான வலி .உயிர் போகிற அவஸ்தை. பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார் பிரபு தேவா.மொத்த யூனிட்டும் அவரை புகழ்ந்து கொண்டிருக்கிறது.
வரலட்சுமி சரத்குமார் ,ரைஜா வில்சன் ,பிரகாஸ்ராஜ் ,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வருகிறார்கள். டி.இமான் இசை.
டிசம்பரில் ரிலீஸ்.
அப்படின்னா ஓடிடி போகாது. தியேட்டருக்கே வந்திரும்னு சொல்றாங்களா?












