தமிழ் திரையுலகின் பிரபல பிண்ண்னிப் பாடகி,மற்றும் இசைக் கலைஞர் ஸ்வாகதா. இவர் ‘பிக்பாஸ்’ மாயாவின் உடன் பிறந்த சகோதரி. இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் ,கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு,வீடியோ எடுத்து மிரட்டியதாகவும், இதையடுத்து ஊரை காலி செய்துவிட்டு ரிஷிகேஷுக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது . பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் குறித்து பாடகி ஸ்வாகதாதனியார் யூடியூப் சேனல் ஒன்றில் .கூறியுள்ளதாவது,” நான் 9 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து பிரேக்கப் ஆகிவிட்டது. அந்த நேரத்தில் இசையமைப்பாளரின் ஸ்டுடியோவில் வேலை செய்து கொண்டிருந்தேன்.அவர் பெரிய இசையமைப்பாளர், ஆனால் ஒழுங்காக பியானோ கூட கையாளத் தெரியாது. என் வேலையில் குறையே இருக்காது. எனக்கு கல்லூரியில் ஏற்பட்ட காதல் முறிந்துபோனதால் அதை ஏற்க முடியாமல் கஷ்டப்பட்டேன். வீட்டில் இருந்தால் கஷ்டமாக இருக்கும் என வேலைக்கு சென்றேன். அந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொணடார் அந்த இசையமைப்பாளர். என்னை அவரின் குடும்பத்தார், நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை பார்த்து வாழ்க்கை மீது நம்பிக்கை வந்தது. அதன் பிறகு எனக்கு சம்பளம் கொடுப்பதை நிறுத்தினார். 10 சதவீதம் கூட கொடுக்கவில்லை. அந்த இசையமைப்பாளர் ஐபோன், கார் வாங்க என்னிடம் கடன் வாங்கினார்.திடீரென்று ஒரு நாள் ஸ்டுடியோவில் தான் அந்த கொடூரம் நடந்தது. அவர் வலுக்கட்டாயப்படுத்தி என்னிடம் தவறான முறையில் நடந்தார். . அதை எல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவு செய்து மிரட்டினார். இதை பற்றி யாரிடமாவது சொன்னால் கேமராவில் பதிவாகியிருப்பதை எல்லோருக்கும் காட்டிவிடுவேன் என்று மிரட்டினார். நான் சின்ன பெண். அவர் ரொம்ப ஸ்டிராங்கானவர். அது சவுண்டு ப்ரூஃப் ரூம். கத்தினாலும் யாருக்கும் கேட்காது. அங்கு சிசிடிவி கேமரா, ரகசிய கேமரா எல்லாம் இருக்கும்.புரோகிராமர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை கவனிக்க ரகசிய கேமராக்கள் இருந்தது. இந்த வீடியோவை வைத்து மிரட்டினால் நீங்கள் தான் சிறைக்கு போவீர்கள் என்றேன். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்று ஓடினேன். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது, திருடினார் என்று பொய் பழி போட்டாங்க.
என்னை மாதிரி பல பெண்களை சிசிடிவியில் பதிவு செய்து பார்த்திருக்கிறார். எப்ஸ்டீனுக்கு எல்லாம் ராஜா தான் சென்னையில் இருக்கும் அந்த இசையமைப்பாளர். ஸ்டுடியோவுக்கு பாட வரும் குழந்தைகளை கூட வீடியோ எடுத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ், ஜிப்ரான், இமான், அனிருத் எல்லாம் உண்மையான ப்ரொஃபஷனல்கள். ஆனால் அவர் ரொம்ப மோசமானவர். என் தங்கை மாயா தான் என்னை காப்பாற்றினாள்
என்னை மாதிரி பல பெண்களை சிசிடிவியில் பதிவு செய்து பார்த்திருக்கிறார். எப்ஸ்டீனுக்கு எல்லாம் ராஜா தான் சென்னையில் இருக்கும் அந்த இசையமைப்பாளர். ஸ்டுடியோவுக்கு பாட வரும் குழந்தைகளை கூட வீடியோ எடுத்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ், ஜிப்ரான், இமான், அனிருத் எல்லாம் உண்மையான ப்ரொஃபஷனல்கள். ஆனால் அவர் ரொம்ப மோசமானவர். என் தங்கை மாயா தான் என்னை காப்பாற்றினாள்

பல பெண்கள் இதே ஆளிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள். அந்த பெண்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை.தற்போது நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ரிஷிகேஷில் வாழ்ந்து வருகிறேன்.விருது கொடுப்பவர்கள் எப்படி இப்படிப்பட்ட நபர்களுக்கு எல்லாம் விருது கொடுக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.என்னிடத்தில் அந்த இசையமைப்பாளர் அத்துமீறி நடந்து கொண்ட பின்னர், நான் அந்த கொடூரன் என்னைத் தொட்ட இடத்தில் இருக்கும் தோல் உரிந்து, புதுத் தோல் வரும்படியான சிகிச்சையை மேற்கொண்டேன். எனது மொபைலில் கூட அந்த இசையமைப்பாளரின் பெயர் வரக் கூடாது என்பது போல செட்டிங்ஸ் அமைத்து வைத்துள்ளேன்.இன்றைக்கு நான் அந்த பயம், மன உளைச்சல் என எல்லாவற்றிலிருந்தும் வெளியே வந்துவிட்டேன். ஆனால் இப்போது நான் தைரியமான பெண்ணாக இருக்கிறேன்.

நான் அந்த இசையமைப்பாளரின் பெயரைச் சொல்லாமல் விஷயத்தை சொல்லி உள்ளதால், அந்த இசையமைப்பாளர் என்னை ஏதாவது செய்ய முயற்சிக்கலாம், பெரிதாக என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம் தற்போது உள்ளது.என்னிடத்தில் மட்டும் இல்லாமல் வேறு சில பெண்களுடனும் அந்த கொடூரன் இப்படித்தான் நடந்து கொண்டுள்ளார். நான் சில பெண்களுக்கு அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர உதவி செய்துள்ளேன். இது அந்த இசையமைப்பாளரின் மனைவிக்கும் தெரியும், தெரிந்து கொண்ட பின்னரும் அந்த இசையமைப்பாளருடன் தான் அவர் வாழ்ந்து வருகிறார். நான் சீக்கிரமே ஆதாரத்துடன் அந்த இசையமைப்பாளர் யார் என்று கூறுவேன். சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எனக்கு இப்போது அந்த தைரியம் வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் பாடகி ஸ்வாகதாவின் பேட்டி திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












