தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி நடிகர் சிலம்பரசன் அவரது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி வலம்வருகிறது. இது குறித்து சிம்பு பேசுகையில், ”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான , உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அணைத்து ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ” எனக் கூறியுள்ளார்..இந்நிலையில்,
இச்செய்தி குறித்து சிம்பு மீண்டும்த னது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
இந்தப் போலி செய்திக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறேன், மீண்டும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் நிச்சயம் வேறு வழியில் வேறு விதமான பதிலடி கொடுப்பேன். சாத்தானின் கடவுளைக் கட்டவிழ்த்துவிடாதே.என்கிறார் ஆவேசத்துடன்