“இந்தா புள்ளே ..உன் புருஷன் பேரை சொல்லு?”
“எம் புருசன் கிட்டே கேட்டு தெரிஞ்சிக்கோ!” என விஜய் ஆண்டனிக்கு டிமிக்கிக் கொடுத்து விட்டு ‘காளி’ பட பாடல் காட்சியில் ஓடுவாரே அவர்தான் அம்ரிதா.டி.வி.யில் அடிக்கடி பார்க்க கேட்க முடிகிற பாடல்.
“இவர் எப்படி சினிமாவுக்கு வந்தார்? ஆளும் அம்சமா அசத்துறார். தெரிஞ்சவங்க வீட்டுப் பிள்ளையோ?”
“அய்யோ சார்! எனக்கு சினிமாவில் யாரும் அறிந்தவங்க தெரிந்தவங்க யாரும் இல்ல. என் குடும்பத்திலிருந்து இந்த கனவு உலகம் வந்திருக்கிற முதல் ஆள் நான். பி.காம்.பட்டதாரி! நிறைய ஷார்ட் பிலிம், ஆட் பிலிம் ,மியூசிகல் ஆல்பம் பண்ணிருக்கிறேன். அதன் வழியாகத்தான் எனக்கு ‘படைவீரன்’ சான்ஸ் கிடைத்தது. இப்ப விஜய் ஆண்டனி சாரின் ‘காளி ‘ படம்.” என சிரிக்கிறார்.
“பெண் டைரக்டர் கிருத்திகா உதயநிதி என்ன சொன்னாங்க?”
“அவங்களின் ஹெல்ப் எனக்கு மிகப் பெரிய பலம். மேடம்தான் என்னை செலக்ட் பண்ணினாங்க.!அசவுகரியமாக இருக்குன்னு உணர்ந்தால் அந்த சீனை எப்படி பண்ணினால் நல்லா இருக்கும் என்பதை சொல்லி சுலபமாக்கிடுவார்.இப்படி நிறைய அனுபவங்கள்.”
“ஹீரோ விஜய் ஆண்டனி ரொம்பவும் கறார் என்பார்களே?”
“வெரி வெரி நைஸ் பெர்சன்! இவ்வளவு உயரத்துக்குப் போயும் அவரால் எப்படி இவ்வளவு சிம்பிளாக இருக்க முடியிது? அது பெரிய ஆச்சரியம். பந்தா இல்லை. லவ் சீன்ல எனக்கு நெர்வஸா இருக்கும்? எதுக்கும்மா பதட்டப்படுறே…வெரி ஈசி என்று சொல்லிக்கொடுப்பார். காதல் காட்சிகள் மிகவும் நல்லா வந்திருக்குன்னா சாரும் ஒரு காரணம்” என்கிறார் அம்ரிதா.
பொழச்சுக்குவே தாயி!