ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் ,தனுஷ்,ஸ்ருதிஹாசன் நடித்த’ 3 ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ பாடல்களும், படமும் பெரிய வெற்றியை பெற்றது.தற்போது மூன்றாவது முறையாக ‘மாரி’ படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதிலும் தனுஷ் தான் வழக்கம் போல் பாடல்களை எழுதி யுள்ளார்.கொலைவெறி, வாட்ட கருவாட் போன்ற கலக்கல் பாடல்களை தொடர்ந்து இப்படத்தில் தரை டிக்கெட் என்ற பாடலை தனுஷ் எழுத, அனிருத் இசையமைத்துள்ளார். இந்த பாடலும் முந்தைய பாடல்களை போலவே ரசிகர்களை கவரும் என்கிறது ‘மாரி’படக்குழு.