மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் படநிறுவனம் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிக்கிறார்.
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் K.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். இவர்களுடன் முன்டாசுப்பட்டி காளிவெங்கட், கயல் தேவராஜ், இயக்குனர் ராஜீஸ்வரன், ஆகியயோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை மோனிக்குமார்.ஜி கவனிக்கிறார்.(இவர் ஹாலிவுட் படங்களான ஸ்லம்டாக் மில்லியனர், மரியான், கோஸ்ட் புரோடோகால் போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.)
இந்த படத்திற்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைதிருக்கிறார். இப்படத்தில் சென்னை ஆட்டோக்காரனாக நாயகன், ஜனனி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் மனதில் இடம்பெற முயற்சிக்கும் வேலையில், உதவும் மனப்பான்மை கொண்ட நாயகன் சட்ட விரோத கும்பலின் சதியில் தானாக மாட்டிக் கொள்ள, அதனால் தன்னுடைய நண்பர்களுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து காப்பாற்ற போராடும் திகில் நிறைந்த பொழுது போக்கான படம்.இப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக அமையும் இந்த சதுரன்.என்கிறார் இயக்குனர் K.ராஜீவ்பிரசாத்.