Tuesday, March 2, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

தியா திருட்டு கதை ! உதவி இயக்குநர் குமுறல்!!

அது அப்படியே என் கதை, பதற்றம் தாங்கவில்லை எனக்கு...

admin by admin
April 29, 2018
in News
0
607
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

எடப்பாடியாரின் சாமர்த்தியம் அமித்ஷாவிடம் செல்லுமா?சசிகலா வருவாரா?

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

விஜய் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ தியா ‘. லைகா புரொடக்‌ஷன்ஸ் படநிறுவனம் தயாரித்து இருந்தது..இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரைத் தன் படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததால் சர்ச்சையானது. நீதிமன்றம் வரையிலும் சென்றது.படத்தின் தலைப்பை ‘லைகாவின் கரு’ என்றுகூட மாற்றினார்கள். ஆனால் நீதிமன்றம் இதற்கும் தடை விதித்துவிட்டது.இதனால் வேறு வழியில்லாமல் படத்தின் நாயகியான ‘தியா’வின் பெயரையே படத்தின் தலைப்பாகவும் மாற்றி வெளியானது.இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாகவும், தெலுங்கு ஹீரோ நாக சவுரியா நாயகனாகவும் நடித்துள்ளனர்.
“கருக் கலைப்பு செய்வது பாவச் செயல். அது எத்தகைய தருணத்தில் உருவான கருவாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தான். அதை அழிப்பதும் கொலையே ” என்பதைச் சொல்கிறது இத்திரைப்படம். கருவில் அழிந்த உயிர் 5 வயது பெண் குழந்தையாகி தன்னை அழித்தவர்களை எப்படிப் பழி வாங்குகிறது என்பது தான் ‘தியா ‘படத்தின் கதை.தற்போது, தியா படத்தின் கதை தன் கதை தான் என பெருங் குமுறலுடன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் பொன்கே. சந்திரகுமார் என்கிற உதவி இயக்குநர். அவரிடம் ,தியா உங்க கதைன்னு எதை வச்சு சொல்றீங்க ? என கேட்ட போது,படபடவென கொட்டி தீர்த்து விட்டார்.”எனக்குச் சொந்த ஊர் திருச்சி . நான் இயக்குநர் ராஜகுமாரன் அவர்களிடம் ‘திருமதி தமிழ்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணியாற்றியிருக்கிறேன். ‘நாட்டாமை’யில் ஈரோடு செளந்தரில் தொடங்கி பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படிப் பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் போராடி வரும் உதவி இயக்குநர் நான் .நான் எப்படிக் கதை சொல்வேன், எப்படிக் காட்சிகள் சொல்வேன் என்று என்னிடம் பழகிய நண்பர்களுக்குத் தெரியும். எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் சினிமாவில் நல்ல நேரம் என்று ஒன்று வர வேண்டும் அல்லவா? அப்படி எனக்கான நேரத்துக்காகக் காத்திருந்தேன். காலம் கனிந்து வந்தது . அன்பழகன் என்கிற ஒரு நண்பர் மூலம் தயாரிப்பாளர் தேடினேன். நண்பர் அன்பழகனிடம் என் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் இலங்கையிலிருந்து வரும் தயாரிப்பாளருக்குப் படம் பண்ணலாம் என்றார். தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர் படம் தயாரிக்கச் சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறியிருந்தார். படம் பற்றி முறையாகப் பேசி முன்பணம் வாங்க வேண்டியதுதான் பாக்கி. நம் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது நாமும் இயக்குநர் ஆகப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு டனும் கனவுடனும் தயாரிப்பாளரைச் சந்திக்கும் தருணத்துக்காகத் காத்திருந்தேன்.என் படத்திற்கு ‘குறி’ அல்லது ‘கரு’ அல்லது ‘சிசு ‘என்று மூன்று தலைப்புகளை வைத்து இருந்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தினத்தந்தி நாளிதழ் பார்த்துவிட்டு நண்பர்கள் போன் செய்தார்கள். என்னப்பா உன் கதை அப்படியே ‘தியா’ என்கிற படமாக வந்திருக்கிறது. முழுக்கதையும் பேப்பரில் போட்டிருக்கிறது. நானும் பேப்பரைப் படித்தேன். அது அப்படியே என் கதை. பதற்றம் தாங்கவில்லை எனக்கு . அப்படியே திரையரங்கம் போய் ‘தியா’ படத்தைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியே என் கதை. சிலவற்றை மட்டும் மாற்றியிருந்தார்கள். நான் வீரியமாக வசனங்கள் வைத்திருப்பேன். இதில் அந்த 5 வயதுக் குழந்தை அதிகம் பேசாமல் மாற்றியிருந்தார்கள்.மற்றபடி தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் முதல் டாக்டர் கம்பவுண்டர் வரை கொல்வது என்கிற அடிப்படைக் கதை படத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னுடையது .படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்தக் கதை என் இயக்குநர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்களுக்குத் தெரியும்.இந்த நிலையில் நான் செய்வது? நான் சில ஆண்டுகளாகப் பலரிடம் கூறி வந்தது , பலருக்கும் தெரிந்தது இப்போது அது படமாக வந்திருக்கிறது. இந்தக் கதையைப் பற்றி 2ஆண்டு களுக்கு முன்பே நண்பர்களிடம் பேசியது , அந்த நண்பர் அன்பழகனி டம் செல்போனில் பேசியவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு என்னிடம் உள்ளன. என்னிடம் தயாரான முழுத் திரைக்கதையும் உள்ளது. இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்குச் சாட்சியாக இயக்குநர் ராஜகுமாரன் உள்பட பல நண்பர்கள் உள்ளனர் . எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் ‘தியா ‘ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும் “என்று குமுறலுடன் கூறி முடித்தார் சந்திரகுமார்.

Previous Post

SamanthaRuthPrabhu celebrated her birthday in the sets of ‘U’turn .(stills)

Next Post

விவசாயி படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் மறுப்பு!

admin

admin

Related Posts

எடப்பாடியாரின் சாமர்த்தியம் அமித்ஷாவிடம் செல்லுமா?சசிகலா வருவாரா?
News

எடப்பாடியாரின் சாமர்த்தியம் அமித்ஷாவிடம் செல்லுமா?சசிகலா வருவாரா?

by admin
March 1, 2021
சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !
News

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

by admin
March 1, 2021
“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!
News

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

by admin
March 1, 2021
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !
News

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

by admin
March 1, 2021
ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!
News

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

by admin
February 28, 2021
Next Post
விவசாயி படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் மறுப்பு!

விவசாயி படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் மறுப்பு!

Recent News

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்புறாராம் !

March 1, 2021
“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

“உண்மையான தமிழனே ஆளவேண்டும்!” -ராகுல் காந்தி அதிரடி பிரசாரம்.!

March 1, 2021
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !

March 1, 2021
ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

ஆர்யா மீது பிரதமர் மோடி அலுவலகத்தில் மோசடிப்புகார்!

February 28, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani