பேரன் பேத்திகளை தூங்க வைப்பதற்கு தாத்தா,பாட்டிகள் கதை சொன்னது ஒரு காலம்.இன்றைக்கும் கிராமங்களில் சிலர் ‘அண்டரண்ட பட்சி’களின் கதைகளை சொல்லி வருகிறார்கள்.
நம்ம ஊர் தாத்தாக்களின் அபாரமான கற்பனைக்கு மேலைநாட்டு வித்தகர்கள் உருவம் கொடுத்து உயிர் கொடுக்கிறார்கள்.
அதைப் போன்ற ஒரு கதைதான் ‘த இன்பினிட்டி வார்’ என்கிற படம்.சிறிசிலிருந்து பெரிசு வரை பார்க்கலாம் என்கிற இனம் சார்ந்தது.
இந்த படத்தைப்பார்த்து விட்டு கதையின் முதலும் புரியல.முடிவும் புரியல என்கிற ரீதியில் டுவிட்டி இருந்தார்.
உடனே நம்ம ரசிகர்கள் “அமிதாப் தாத்தா, பேத்தி ஆராதியாவிடம் கதையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் .உங்களை விட பேத்தி பெட்டர்”என்று கிண்டல் பண்ணுகிறார்கள்.
அதிலும் ஒரு சுகம் இருக்கிறதே இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டாருக்கு!