இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் எனப் பன் முகங்கள் கொண்டவர் தமிழ்த் திரையுலகின் அஷ்டவதானி என அழைக்கப்படும் டி.ராஜேந்தர். 2007-ல் ,டி. ராஜேந்தர் எழுதி , இயக்கி நடித்த படம் வீராசாமி. இதில் மும்தாஜ் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் எந்தப் படத்தையும் இயக்கி, நடிக்காத டி.ராஜேந்தர் ஒருதலை காதல் என்ற படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் எழுதியக்கி வருவதாக கூறப்பட்டது.இந்நிலையில் கே.வி.ஆனந்த் இயக்கிய‘கவண்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.மேலும்ஒரு சில படங்களில் பாடலுக்கு மட்டுமே ஆட்டமும் போட்டு வந்தார்.பின்னணி பாடல்களையும் சில படங்களில் நட்புக்காக மட்டுமே பாடியும் வருகிறார். அந்தப் படங்களும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையே பெற்று வருகிறது.இதனால் இவருக்காக இன்றைக்கும் காத்திருக்கும் இயக்குனர்கள் ஏராளம்.மேலும் சிம்புவின் இசையில் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில்‘வா முனிம்மா’ என்ற பாடலைத் தன் மனைவி உஷாவோடு இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கிட்டதட்ட 11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்டி.ராஜேந்தர் புதிய படமொன்றை எழுதி,இயக்கி , தயாரித்து நடிக்க உள்ளாராம் ,நாயகன்,நாயகி இருவரும் புதுமுகங்களாம்.இவர்களுடன்,ராதாரவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனராம். இன்றைய அரசியலை தனது ஸ்டைலில் நையாண்டி கலந்து கலக்கல் படமாக உருவாக்க இருக்கும் இதில், கிட்டத்தட்ட 17 காமெடி நடிகர்கள் நடிக்க உள்ளனராம்.