இளம் வயதில் மதுரையில் நடந்த ஒரு சம்பவம் சூப்பர் ஸ்டார் ரஜினியை மிகவும் பாதித்து விட்டது. அதற்கு காரணமானவர்கள் மலைப் பிரதேசத்தில் இருக்கிறார்கள். அவர்களை கண்டு பிடித்து தண்டிப்பதற்கு வயதான ரஜினி முற்படுகிறார். மதுரையில் நடந்த அந்த சம்பவங்களை சென்னையில் மதுரை செட் போட்டு எடுத்து விட்டார்கள். இது தமிழ்ச்சினிமாவில் வழக்கம்தான்.
சரி இந்த கதைக்கான வேர் கேரளம் என்கிறார்கள். மோகன்லால்- படம். ஊட்டியில் உள்ள போர்டிங் பள்ளியில் தேடப்படும் குற்றவாளியின் பிள்ளை படிக்கிறது.இதனால் புலனாய்வுத்துறை அதிகாரியான மோகன்லால் ஊட்டி போர்டிங் பள்ளியில் வார்டனாக சேர்ந்து அந்த பிள்ளையை கண்காணிக்கிறார். இதைப்போல டார்ஜிலிங் ரேஞ்சர் கல்லூரியில் படித்து வரும் பாபி சிம்ஹாவை கண்காணிக்க ரஜினி வார்டனாக சேருகிறார். அப்படியானால் விஜய் சேதுபதி?
அவர்தான் ரஜினியால் தேடப்படுகிற முக்கிய குற்றவாளி!
இப்ப புரிந்திருக்குமே!