சந்தைன்னு இருந்தால் எல்லா கடைக்களும்தான் இருக்கும்! பூக்கடைக்கு பக்கத்தில பழைய இரும்புக்கடையும் இருக்கும். கருவாட்டுக் கடை இல்லையேன்னு சந்தோஷமாக போறதை விட்டு ஏன்யா காயலான் கடையைப் போட்டேன்னு சண்டை போடலாமா?
நடிகை ராஷ்மிகா கட்டி ஏறி காதை அறுக்காத குறைதான்!
“நான்சென்ஸ்” சா எழுதாதீங்க. எரிச்சலா இருக்கு “என்று கத்துகிறார். விஷயம் இதுதாங்க.
ராஷ்மிகாவுக்கும் கன்னட டைரக்டர் ரட்சித் ரெட்டிக்கும் காதல்.ஊர் அறிஞ்சதுதான்! திடீர்னு அவங்க பேசாம இருந்தாதால் அவர்களுக்கும் பிரிவு என்று எழுதி விட்டார்கள்.
“நாங்க பிரிஞ்சிட்டோம்னு சொன்னமா ?ஏன் இப்படி நான்சென்ஸா எழுதுறீங்க. எங்களுக்குள் தகராறோ,சண்டையோ இல்லை. சேர்ந்துதான் இருக்கிறோம்..ரெண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்”என்று கோபமுடன் சொல்லியிருக்கிறார்.