கீரை வியாபாரம் செய்த இடத்தில் மீன் வியாபாரம் செய்தாலே கொதித்துப் போவார்கள். எப்படி சைவக்கடை நடக்கிற எடத்தில அசைவக் கடை போடலாம்?
இப்படி இருக்கிறபோது தனக்கு எதிராகத்தான் போட்டிக்கு வருகிறாள் என ஒரு நடிகை மற்றொரு நடிகையைப் பற்றி நினைத்தால்? வம்புச்சண்டைக்கு வருகிறவனிடம் கையில் கம்பு கொடுக்கும் கதைதான்!
சாய் பல்லவி, ராஷ்மிகா இருவரும் கில்லாடிகள்தான். ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர்.
யாருக்காவது ஒருவருக்கு பொறாமை பூத்து வரணுமே. வரவில்லை என்றால் வரவழைப்பதற்கு என சிலர் பிறந்திருக்கிறார்களே!
அவர்கள் சும்மா இருப்பார்களா?
சாம்பிராணி போட்டு விட்டார்கள். ஆடிவிட்டார் ராஷ்மிகா.
சாய் பல்லவி எந்த மாதிரியான கேரக்டர்களை செய்ய மாட்டாரோ அந்த மாதிரியான கேரக்டர்களிலும் அது கிளாமர் இல்லாமல் இருந்தாலும் சரி, கிளாமர் தூக்கலாக இருக்கிற படமாக இருந்தாலும் சரி ‘கொடு அட்வான்சை’ என கை நீட்ட ஆரம்பித்திருக்கிறார். எண்ணிக்கை அதிகமாவதுடன் டாமிநேஷனும் இருக்கும் அல்லவா?
தற்போது சாய் பல்லவி சைடில் பிரஷர் !
‘நாம்பளும் கிளாமர் சைடுக்குப் போனால்தான் சரியா இருக்கும், ஓவர் செக்சியா அந்த பொண்ணு போகாது.அத மாதிரி நாம்பளும் அளவோடு கவர்ச்சியா நடிக்கலாம் மேடம்” என மந்திரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
வேப்பிலை அடித்தால் பேயே இறங்கி ஓடுகிற போது பேதை நெஞ்சம் இளகாதா?