
இயக்குனர் மோகன்ராஜா ,நடிகர் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார்கள். ஆம், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த தனி ஒருவன் 2 படம் மிகப்பெரிய கூட்டணியுடன் மிக விரைவில் ஆரம்பமாகிறது. தனி ஒருவன்-2 குறித்து இயக்குனர் மோகன் ராஜா கூறியதாவது,, “தனி ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அன்பும், அதற்கு கொடுத்த மிகப்பெரிய வெற்றியும் அலாதியானது. அவர்களின் எதிர்பார்ப்புக்கும் அதிகமான ஒரு விஷயத்தை இந்த தனி ஒருவன் 2 மூலம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கிறேன்.

நாங்கள் ஏற்கனவே முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர்களுடன் பேசி வருகிறோம். சமூக பின்னணியில் அமைக்கப்படிருக்கும் இந்த தனி ஒருவன் 2 கதையில், நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் துரத்தல் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமான முறையில் இருக்குமாறு முயற்சித்து வருகிறோம்” என்றார்.

முதல் பாகத்தில் நடித்த நாயகனாக நடித்த ஜெயம் ரவி தனி ஒருவன் 2ஆம் பாகத்திலும் நாயகனாக தொடர்கிறார். புதிய சவால்களையும், மோதல்களையும் இந்த படத்தில் சந்திக்க தயாராகி வருகிறார் என்கிறார்.விரைவில் நயன்தாரா இதிலும் கதாநாயகியாக தொடர்வாரா என்பது குறித்தும், மற்ற நடிகர், நடிகைகள்குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.