பெண்ணென்றாலும் துணிச்சல் வேண்டும். இந்த காலத்தில் அரசியல் மேடைகளில் கூட பெண்களின் எண்ணிக்கை அருகி விட்டது. ஆண் ஆதிக்கம் அந்த அளவுக்கு வலிமை பெற்று விட்டது. இந்த நிலையிலும் கருத்து கஸ்தூரி துணிந்து கருத்துகளைச்சொல்கிறார் என்றால் அவரை வரவேற்கவேண்டும். தமிழீழத்தில் இன அழிப்பில் தலைமை தாங்கிய ராஜபக்சேயின் வருகைக்கு கண்டனத்தைக்கூட தமிழ்த் தலைவர்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் கஸ்தூரி….
இனி அவரது பதிவு….
“சுப்ரமணியன் ஸ்வாமி அழைப்பின் பேரில் ராஜபக்சே டெல்லி வருகை ! “இந்தியா-இலங்கை உறவு பற்றி உரையாற்றுகிறாராம் ! மோடி, சோனியாவையும் சந்திக்கிறாராம் ! கட்சிபேதமில்லாமல் அத்தனை டெல்லிகாரங்களும் தமிழனை வஞ்சிக்கிறார்கள்.
ANTI TAMILS யாரு வோட்டு போட்டு இந்த சு.சாமி மதுரையில ஜெயிச்சாரு?” எனக் கேட்டிருக்கிறார் கஸ்தூரி.