ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்படநிறுவனம் சார்பில், கல்பாத்தி S அகோரம், கல்பாத்தி S கணேஷ், கல்பாத்தி S சுரேஷ்ஆகியோர் தயாரித்து வரும் புதிய படம் “தனி ஒருவன்” இதில்,ஜெயம் ரவி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்க அரவிந்த் சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யாரும் நடித்திராத ஒரு புது கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா நடிக்க, உடன் கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வரும் மோகன் ராஜா கூறியதாவது,’நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை வித்தியாசமான கோணத்தில் புதுவிதமான திருப்பங்களை கொண்ட கதை அம்சத்துடன் தயாராகி இருக்கும் படமே “தனி ஒருவன்”. இது எங்கள்- கூட்டணியில் உருவாகியுள்ள ஆறாவது படமாகும்.
இதில், அரவிந்த் சாமி இதுவரை நடித்திராத முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே மாதிரி,யாரும் நடித்திராத ஒரு புது கதாபாத்திரத்தில் தம்பி ராமைய்யா நடிக்க, உடன் கணேஷ் வெங்கட்ராமன், நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.மேற்கிந்திய இசையில் புதிய பரிமானத்தை அளிக்கும் ஹிப் ஹாப் தமிழா புகழ் ஆதி இப்படத்திற்க்கு இசை அமைத்துள்ளார். பொதுவாக துள்ளல் இசைக்கு மட்டும் பயன்படுத்தபட்ட ராப் இசையை, நல்ல கருத்துக்கள் கொண்ட வரிகளுக்கு உணர்ச்சிகளை உத்வேகம் படுத்தும் வகையில் ஹிப் ஹாப் இசையை கையாண்டுள்ளார். இசை பிரியர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்.இப்படத்தின் இன்னொரு தனியம்சம் யாதெனில், இப்படத்திற்கு ஒளிப்பதிவை செய்த ராம்ஜி, படத்தின் கதையை கேட்டவுடன், இப்படத்தை ஃபிலிம் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் என்று கூற ஃபிலிம் தொழில்நுட்பத்திலேயே படமாக்கப்பட்ட்து. டெஹரடூன், மசூரி, கோவா, பேங்காக் போன்ற பகுதிகளில் படமாக்க பட்ட தனி ஒருவன், தற்போது படபிடிப்பு முழுவதும் முடிந்து இறுதிகட்ட மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின்பாடல் வெளியீட்டு விழா, ஜுலை15ம்தேதியும்,படம்ஆகஸ்ட்மாதமும்வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது.என்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை, ராம்ஜி கவனிக்க,ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்