விஜய்யை புகழ்வதாக சொல்லி அவரது முன்னாள் பி.ஆர் ஓ பி.டி.செல்வகுமார் சில பல பேட்டிகளை தட்டி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியையும் மட்டம் தட்டி இருந்தார். இதை கண்டிக்கும் விதமாக ஒரு அறிக்கையை விஜய் மன்றத் தலைமை வெளியிட்டிருக்கிறது.
“நமதுதளபதி விஜய்யின் முன்னாள்மக்கள் தொடர்பாளராக நீண்டகாலம் நல்ல விதமாக பணிபுரிந்தவர் தற்போதுவேறு சில காரணங்களாஅப்பணியில், நமது தளபதி விஜய்யுடன் இல்லை என்பதை தங்களின்மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், அவர், நமது மக்கள் இயக்கதில் யாதொரு பொருப்பையும் இதுநாள் வரை வகிக்கவில்லை !இருப்பினும், தளபதி விஜய் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்த கருத்தை, தளபதி விஜய்யின் கருத்தை போல் ஊடகங்களில் வெளியிடுவதை நமது தளபதி விஜய் ஏற்கவில்லை என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
அதோடு, நமது தளபதி விஜய்எந்த காலக்கட்டத்திலும், எச்சூழலிலும், சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ, இழிவாக, தரம் தாழ்ந்தோ, ஒப்பீட்டு பேசியதில்லை ! அப்படி யாரையும் பேச சொல்லி யாருக்கும் நமது தளபதி விஜய் அதிகாரம் அளிக்கவில்லைஎன்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.ஆகவே,தளபதி விஜய் குறித்த தகவல்களை, ஊடகங்களில் பேசுவது, விவாதிப்பது, பங்கேற்றுகருத்து கூறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவோரின் கருத்துக்களையாரும் நம்பவேண்டாம் என இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்பதாக மாநிலத் தலைவர் புஸ்சி ஆனந்த் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிக்கையில் முன்னாள் பிஆர்ஓ.பிடி செல்வகுமார் பெயரைக்கூட குறிப்பிட தளபதி விஜய் விரும்பவில்லை என்பது தெரிகிறது. அவ்வளவு கோபம் அவர் மீது!