மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு ‘பேரன்பு’படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அசந்து போய் இருக்கிறார்.
அவர் சொன்னதை கேளுங்கள்.
“பேரன்பு படத்தில் வேறு மாதிரியான மம்முட்டி சாரை பார்த்தேன்.
நிச்சயம் எல்லோரும் பார்க்க வேண்டிய படம்.
மம்முட்டி சாரை ஏன் இந்தியாவின் லெஜெண்ட் என்று சொல்கிறார்கள்? படத்தை பாருங்கள் .புரியும்.
தங்கமீன்கள் படத்திற்குப் பிறகு சாதனாவுக்கு இன்னொரு தேசிய விருது கிடைக்கும் என நினைக்கிறேன்.
இப்படத்தின் இசை, ஒளிப்பதிவு, என் எல்லாமே அருமையாக உள்ளது. இப்படத்தை ராம் சார் எடுத்துள்ள விதம், உணர்ச்சிகள், உணர்வுகளைச் சொல்லி இருக்கும் விதத்தை பாராட்ட தெரியவில்லை.
நிறைய காட்சிகளை பார்த்து கண் கலங்கிவிட்டேன். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் “என்று சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார்.