சத்ரு (விமர்சனம்). சினிமாமுரசம் தரவரிசை; 3/5 . நடிகர்கள்; கதிர்,பொன்வண்ணன்,சிருஷ்டி டாங்கே,லகுபரன்.
இயக்கம் ;நவீன் நஞ்சுண்டன்
துடிப்பான போலீஸ் அதிகாரிக்கும் அரக்கத் தனமான ரவுடிக் கும்பலுக்கும் இடையில்இருக்கிற வன்மம் தான் கதையின் அடித்தளம். எத்தனையோ படங்களில் பார்த்திருந்தாலும் சத்ருவில் எதிர்பார்ப்புகள் விறு விறுப்பு சாய்ந்து உட்காரமுடியவில்லை.
வில்லன் லகுபரன். கொடூரமான முகம்.அனல் கக்கியபடியே இருக்கிறது. தனது கோஷ்டியில் ஒருவன் கொல்லப் பட்டதுக்காக போலீஸ் அதிகாரி கதிரின் ஓட்டு மொத்த குடும்பத்தையும் ஒரே இரவில் காலி செய்ய வேண்டும் என்கிற வெறி படம் முழுவதும் நிரவிக்கிடக்கிறது.லகுபரன் நினைத்தால் ரகுவரன் ஆகலாம்.!
போலீஸ் அதிகாரி மாரிமுத்துவின் ஈகோவின் பலனை பயன்படுத்திக் கொள்வதுதான் வில்லனுக்கு பலமே.! காவல் துறையின் இந்தக் கறையை இயக்குநர் நஞ்சுண்டன் இன்னும் அழுத்தமாக காட்டி இருக்க வேண்டும்.தன்னை விட தனது ஜூனியர் பெயர் வாங்கினால் பெருமை கொள்ள வேண்டிய காவல் துறை அதிகாரிகளிடம் இல்லாதது அது தான்!
நாயகன் கதிரை விட வில்லன் லகுபரன்தான் கண்ணை மூடினாலும் வருகிறார்.
காவல்துறை அதிகாரிக்கு உரிய கம்பீரத்தை குரலில் காட்டுவதை விட முகத்தில் காட்டியிருக்கவேண்டும் கதிர். மிஸ்ஸிங் தோழா! தந்தை பொன்வண்ணன் கொல்லப்பட்டார் என்கிற ஒற்றைக் காரணமே போதும் சிறுத்தையைப்போல பாய.! ஆனால் அவர் கொல்லப்பட்டதற்கு காவல்துறை எடுத்த நடவடிக்கை ?
கதாநாயகி சிருஷ்டி டாங்கே. மகேஷ் முத்துசாமியின் கேமராவுக்கு அதிக வேலை இல்லாமல் போய் விட்டது.நள்ளிரவு சென்னையின் அமைதிக்குள் எத்தகைய ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன என்பதை நமக்கு காட்டிய பெருமை இவருக்கு உண்டு.
அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு ஒன்று மட்டுமே இயக்குநரின் திரைக்கதையில் இருக்கிறது.