திருமணத்திற்கு பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் செய்துள்ள நடிகை ஜோதிகா, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிஸியாகவே நடித்து வருகிறார்.இந்நிலையில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகி வந்த புதிய படத்தில் ஜோதிகா நடித்து முடித்துள்ளார். இப் படத்தின் மொதத படப்பிடிப்பு நாட்களே வெறும் 35 நாட்கள் தான் என்கிறது படக்குழு. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்கு ‘ஜாக்பாட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு அதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களும் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஜோதிகாவும், ரேவதியும் போலீஸ் உடையில் தோன்றுகின்றனர். இவர்களுடன் இப்படத்தில்,யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். அனந்தகுமார்- ஒளிப்பதிவு,விஷால் சந்திரசேகர்- இசை.