“காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே இந்து தீவிரவாதி “என்று மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் பேசியதற்காக அரவக்குறிச்சி போலீசார் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வழக்குத் தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கமல்ஹாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை விசாரித்த நீதிபதி புகழேந்தி “வருகிற 15 நாட்களுக்குள் அரவக்குறிச்சி நான்காவது நீதித்துறை நடுவர் மன்றம் முன்பு ஆஜராகி உரிய பத்திரங்களை வழங்கி ஜாமீன் பெற வேண்டும்”என்று கமல்ஹாசனுக்கு உத்திரவிட்டிருக்கிறார்..