தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள சில பரிந்துரைகளில்
முக்கியமானது, மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்பது தான். அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தை தமிழக அரசு ஏற்காது என்று தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் மற்றும்கல்வி அமைச்சர்.கேஏ.செங்கோட்டையன் ஆகியோர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
இணையதளங்களிலும் நெட்டிசன்கள் இந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்ட் செய்து தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை.
மத்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது சமூக வலைத்தள பக்கத்தில் மரியான் படத்தில் தனது இசையில் உருவான மரியான் படப்பாடலான ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன? என்ற பாடலை ஒரு பஞ்சாபி சீக்கிய இளைஞர் பாடும் வீடியோவை வெளியிட்டு ‘தமிழ் பஞ்சாபிலும் பரவிவிட்டது’ என்று தனது இந்தி எதிர்ப்பை வித்தியாசமாக பதிவு செய்துள்ளார். இவ்வீடியோ பெரும் வைரலாகி வருகிறது.
https://twitter.com/arrahman/status/1135056979456479232