நாம் முட்டாளாக இருந்தால் எதிரில் இருப்பவன் புத்திசாலிகள் ஆகி விடுவான் என்பார்கள்.
அது மாதிரிதான் ஆகி இருக்கிறது நடிகர் சங்கத் தேர்தலும் செயல்பாடுகளும்.
யார் முட்டாள்கள் யார் புத்திசாலிகள் என்பதை இங்கு அலச வேண்டியதில்லை.
வினையும் வினைப்பயனும் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
பொதுவான ஒரு அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அரசியல் சார்பான கருத்துகளைச் சொல்கிறபோது “அது தன்னையோ அல்லது தான் சார்ந்த அமைப்பையோ பாதிக்குமா” என்பதை கவனிக்க வேண்டும்.
உதாரணமாக “ஜெ.டி.வி. ஆரம்பிக்க காசு எங்கிருந்து வந்தது ?” என்று எதிர்க்கட்சி எரிமலை ஏகாம்பரம் கேட்கலாம்.
அரசின் ஆதரவில் வாழவேண்டிய ஓரமைப்பு சார்ந்த ஒருவர் தனித்த முறையில் அப்படி கேட்கலாமா…அது சங்கத்தைப் பாதிக்காதா? முன் விரோதத்தை சம்பாதிக்காதா?
“எந்த மந்திரி வந்தாலும் கவலையில்லை.விட மாட்டேன்” என்று சாவு வீட்டில் சவால் விடலாமா?
23, 24 ஆகிய இரு தேதிகளை தேர்தல் நடத்துவதற்காக கேட்டவர்கள் அதற்கான பணத்தைக் கட்டி கன்பர்ம் செய்தார்களா? கல்லூரியில் பணம் கட்டியதற்கான சான்றிதழைக் காட்டியிருந்தால் போலீஸ் அனுமதி மறுத்திருக்குமா?
கடந்த தேர்தலில் ஓட்டுப் போட்டவர்களில் 62 பேர் தங்களுக்கு வாக்குரிமை இல்லை என்று பதிவாளர் அலுவலக கதவைத் தட்டியிருக்கிறார்கள். 160 பேர் வரை நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் 3 ஆண்டுகள் பரிசீலனைக்குப் பிறகுதான் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
ராதாரவி எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் கோர்ட்டுக்குப் போய் இருக்கிறார்கள்.
இப்படி சில பிரச்னைகளை அரசுக்கு சொல்லி இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் எத்தகைய சூழல் இருந்ததோ,அதே இடத்தை நோக்கி நடிகர் சங்கமும் சென்று கொண்டிருக்கிறது.
அதன் முதல் கட்டம்தான் மாவட்டப் பதிவாளரின் தேர்தல் தடைக்கான உத்திரவு.!
அடுத்த கட்டம் அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டுக்கு நடிகர் சங்கம் சென்று விடும் என்பதுதான்!
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
-
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு!