அடச்சே…ஆதித்ய பஞ்சாலி இவ்வளவு மோசமான ஆளா, என்று பாலிவுட் பதறிப்போய் இருக்கிறது.
முதல் வரிசை நடிகை. முன்னணி நடிகை.
போலீசில் பதிவு செய்திருக்கிற புகார் படு மோசமாக இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை சொல்லக்கூடாது என்பதால் நடிகையின் பெயரை சொல்ல இயலாது போகிறது.
“பத்து வருடங்களுக்கு முன்னர்.
பதினேழு வயதான என்னை ,புகழின் உச்சம் சென்று கொண்டிருந்த காலத்தில் பயமுறுத்தி பலவந்தம் செய்தார் மது.டிரக் என பல வகைகளில் என்னை மயக்கத்தில் வைத்து பல முறை கற்பழித்தார், மிரட்டினார்,பிளாக் மெயில் செய்தார் ஆதித்ய பஞ்சாலி,
ஒரு முறை பார்ட்டிக்கு சென்றிருந்தபோது எனக்கு மது ஊற்றிக் கொடுத்து அவரது விலை உயர்ந்த ஆடம்பர காரில் வைத்து என்னை பல முறை. கற்பழித்தார்.படம் எடுத்துக் கொண்டார்.
அந்த படங்களைக் காட்டியே என்னை மிரட்டி காரியங்கள் சாதித்துக் கொண்டார் “என்று நடிகை புகாரை பதிவு செய்திருக்கிறார்.
ஆதித்ய பஞ்சாலியின் மனைவியிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என நடிகை வருத்தப்பட்டிருக்கிறார்.