விழாவில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் கம்பேனியின் புதிய சி.இ.ஓ நாராயணன் பேசுகையில்,
“விக்ரம் சாருக்கு நன்றி. 1982-ல ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் துவங்கப்பட்டது. வெற்றிகரமாக நிறைய படங்களைப் பண்ணிருக்கோம். கடாரம் கொண்டான் எங்கள் நிறுவனத்தின் 45-வது படம். கமல் சாருக்குப் பெரிய நன்றி. இந்தப்படத்தில் நாசர் சாரின் மகனை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அக்ஷரா ஹாசனுக்கும் பெரிய நன்றி” என்றார்
எடிட்டர் ப்ரவீன் கே எல். பேசியதாவது,
“சின்ன வயசுலே இருந்தே கமல் சாரின் ரசிகன் நான். அவர் நடிச்ச படத்தில் வொர்க் பண்ணணும்னு நினைச்சேன். அது முடியாவிட்டாலும் இப்போது அவர் தயாரிக்கிற படத்தில வொர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இந்தப்படம் பேப்பரில் என்ன இருந்ததோ அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்” என்றார்
நடிகை லெனா பேசியதாவது,
“கமல் சாருக்கு நன்றி. ராஜேஷ் எனக்கு மிக நல்ல ரோலை கொடுத்திருக்கிறார். சியான் விக்ரம் அவர்களோட பணியாற்றியது லவ்லி அனுபவம்” என்றார்
நடிகர் அபி பேசியதாவது,
“என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல் சாருக்கு நன்றி. விக்ரம் சாரை பெரிய ஹீரோ என்பதால் சூட்டிங் போகும்போது ஒருமாதிரி நினைத்துப் போனேன். ஆனால் அவர் மிக உயர்ந்தவர். இயக்குநர் ராஜேஷ் சார் எத்தனை டேக் போனாலும் எனக்குச் சப்போர்ட் பண்ணினார்” என்றார்
நடிகை அக்ஷ்ரா ஹாசன் பேசியதாவது,
“அப்பாவுக்கு பெரிய நன்றி. எனக்குப் பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார். ராஜேஷ் சார் பெரிய சவாலான ரோலை கொடுத்தார். ரொம்ப நன்றி” என்றார்
இசை அமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது,
“இது என்னோட 25-வது படம். என் 24 படங்களுக்கும் கமல் சாரோட பங்களிப்பு இருந்திருக்கு. விக்ரம் சார் நடிக்கும் போது எங்கு எந்த வாத்தியத்தை இசைக்க வேண்டும் என்பது தெரிந்துவிடும். அந்த அளவுக்கு பெர்பெஜ்ஷன் ஆக்டர் அவர்.அவர் படத்திற்கு ரீ ரிங்காடிங் பண்றது ரொம்ப இண்டர்ஸ்டிங்காக இருந்தது. ராஜேஷ் உள்பட அனைவருக்கும் நன்றி” என்றார்
இயக்குநர் ராஜேஷ் M.செல்வா பேசியதாவது,
“ராஜ்கமல் பிலிம்ல இரண்டு படம் மட்டும் அல்ல. நிறைய படங்களில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறேன். தூங்காவனம் படம் வரும்போது பத்திரிகையாளர்கள் எனக்கு நிறைய தைரியம் கொடுத்தார்கள். என் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. படம் நல்லா வந்திடும் என்பது தெரியும்.
ஏன் இந்தப்படத்தில் அக்ஷரா நடிக்கிறார் என்று பலரும் கேட்டார்கள். இதற்கான பதில் படம் பார்த்தால் தெரியும். கமல் சாருக்கு மறுபடியும் நன்றி. ஏன் என்றால் என் வீட்டில் என்னை நம்புகிறதை விட கமல் சார் என்னை நம்புகிறார்” என்றார்
தயாரிப்பாளர் ரவீந்தரன் பேசியதாவது,
,பத்மஸ்ரீ கமல் சாருக்குப் பெரிய நன்றி. ராஜ்கமல் இண்டர்நேஷனல் கம்பெனியோட படம் பண்றது எனக்குப் பெரிய பாக்கியமா இருக்கு. இந்தப்படத்தில் எல்லா அம்சமும் இருக்கிறது. அபி அக்ஷராஹாசன் நடிப்பு ரொம்ப சிறப்பா இருக்கு. இந்தப்படத்தில் விக்ரம் சார் செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். படத்தில் ஹாலிவுட் ஹீரோ போல நடித்திருக்கிறார் ” என்றார்நடிகர் விக்ரம் பேசியதாவது,
“ஏற்காட்டுல படிக்கும் போது நிறைய படங்கள் போடுவாங்க. எப்பவாது தமிழ் படம் போடுவாங்க.
அக்ஷரா ஹாசன் ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கிறார். படத்தை ரீ ரிங்காடிங்கோட பார்க்கும் போது சூப்பரா இருந்தது. இசை அமைப்பாளர் ஜிப்ரான் அருமையா வொர்க் பண்ணி இருக்கார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் சார் இந்தப்படத்தில் இன்னொரு நடிகர். அழகா நடிக்கச் சொல்லித் தருவார். எல்லாரும் நான் துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷாக இருப்பேன் என்று நினைக்கிறார்கள்.ஆனால் இநத்ப்படத்தில் ரொம்ப ஸ்டைலாக இருப்பேன். இந்தப்படம் நிச்சயம் எனக்குப் புதிய ரசிகர்களைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்” என்றார்
நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது,
“ராஜ்கமல் நிறுவனத்தை துவங்கும் போது அக்ஷரா பிறக்கவில்லை. அப்போது இப்படி எல்லாம் விழா எடுக்க வேண்டும் ஆசைப்பட்டோம்.
விக்ரம் சொன்னார் இங்கிலிஷ் படம் போல இருக்கும் என்றார். அப்படி சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்..நிஜமாகவே இது ஆங்கிலப்படம் போலதான். இங்கு எல்லோரையும் வாழ்த்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது” என்றார்