சிலம்பரசன் என்கிற சிம்புவின் வாழ்க்கையில் நயன்தாரா, ஹன்சிகா ஆகியோர் சிலம்பாடிவிட்டு போய் விட்டார்கள்.
சிம்புவுக்கு 36 வயதாகியும் இன்னும் கல்யாணத்தின் மீது நாட்டமே வரவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி எல்லாவற்றையும் அனுபவித்து ஆண்ட பிறகுதான் இமயமலைக்குப் போய் வருகிறார்.
ஆனால் சிம்புவுக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையவில்லை. ஆனால் இவர் இமயமலை போய் வருகிறார்.
சிம்புவின் சறுக்கலுக்குக் காரணம் அவரது நண்பர்களில் சிலர் என்பதை கண்டுபிடித்து தற்போதுதான் அவர்களை களை எடுத்திருக்கிறார்கள்.
தம்பி, தங்கை ஆகியோருக்கு கல்யாணம் ஆகிவிட்ட நிலையில் சிம்பு மட்டும் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால் அது பெற்றோரை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஒரு கதாநாயகனால் உணராமல் இருக்க முடியாது.
ஒரு திறமையாளர் திரை உலகில் வீணாகி விடக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கிற ரசிகர் பட்டாளத்துக்கு பெரும் கவலை இருக்கிறது. சிம்புவின் பலமே அவரது ரசிகர்கள்தான்!
இந்த நிலையில்தான் சிம்புவின் அப்பா நேற்று காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை பார்த்திருக்கிறார்.
“அப்பா அத்திவரதா! என் மகன் சிம்புவுக்கு சீக்கிரமே கல்யாணத்தை நடத்துப்பா.! சாதாரணப் பொண்ணு என்றால் எப்படியும் தேடிக் கண்டு பிடித்து விடலாம் ஆனால் சிம்புவின் குணத்துக்கு ஏத்த பொருத்தமான பொண்ணு வேணும் .கண்டுபிடித்து கல்யாணத்தை நடத்துப்பா!” என வேண்டினாராம்.