“மோடியும் அமீத்ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜுனரும் மாதிரி. அவர்களில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜூனர் என்று நமக்குத் தெரியாது “என்று சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியிருந்தார். ( அந்த அளவுக்கா அடையாளம் கண்டு பிடிக்க முடியாம போச்சு? கிருஷ்ணர் நீல வண்ண மேனியன். அர்ஜுனன் நம்ம நிறம். கண்டு பிடிக்கிறது ஈசியாச்சே ரஜினி சார்!)
காஷ்மீர் பிரச்னை தொடர்பாக எடுத்திருந்த அதிரடி நடவடிக்கையைப் பாராட்டி அவ்வாறு தனது கருத்தை சொல்லியிருந்தார்.
கிருஷ்ணனும் அர்ஜுனனும் பாரத யுத்தத்தில்தான் கவுரவர்களுக்கு எதிராக குருஷேத்திரப் போர் நடத்தினார்கள் என பாரதம் சொல்கிறது.
இதை மனதில் வைத்துக் கொண்டுநாம்தமிழர் இயக்க சீமான் சொன்னாரோ என்னவோ…?
இப்படி கருத்து சொல்லியிருக்கிறார்.
“ரஜினி சொல்வதெல்லாம் சரிதான். இப்ப கிருஷ்ணனும் அர்ஜுனனும் யார் மீது போர் தொடுக்கப் போகிறார்கள் என்பதே இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
அனேகமாக அவர்கள் மக்கள் மீதுதான் போர் தொடுப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் அவதாரமாக இருக்கலாம் .முதலில் மோடியும் அமீத்ஷாவும் நல்ல மனிதர்களாக இருக்கட்டும்!” என்பதாக பேசி இருக்கிறார்.
ரஜினி கருத்து சொன்ன கேக்கணும் உள்ள பூந்து ஆராயக்கூடாது சீமான்!