மாதவனின் பூஜை மாடத்தில் சிலுவை வைக்கப் பட்டிருந்ததைப் பார்த்த ஒரு டிவிட்டர் குருவி அவரை ‘போலி’ என ஏசி இருந்தது.
அய்யங்கார் வீட்டில் சிலுவை இருக்கலாமா? அதுவும் பூணுல் போட்டுக் கொண்டு பூஜை நடத்தும் ஆச்சாரமானவர் செய்கிற காரியமா இது என்கிற கருத்தில் கேட்டிருந்த அந்த இந்துமத வெறித்தனத்துக்கு சம்மட்டியால் அடித்திருக்கிறார் மாதவன்,
அவருடைய பதிலுக்குப் போவதற்கு முன் அவரைப் பற்றிய சில உண்மைகள்.
அவர் கல்லூரியில் சிறந்த தேசிய மாணவர் படை வீரர். இதனால் பிரிட்டிஷ் ஆர்மி,ராயல் நேவி,ராயல் ஏர் போர்ஸ் ஆகிய பாதுகாப்பு படைகளில் பயிற்சி பெற்றிருக்கிறார். இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தவருக்கு சில மாதங்கள் வயது வித்தியாசப்படவே சேர இயலாது போயிற்று.
அதனால் தேசப்பற்றுள்ள ஒரு ராணுவ அதிகாரிக்கு நிகரானவர் மாதவன்.
சரி இனி அவரது பதில் பற்றி பார்ப்போம்.
“உங்களைப் போன்றவர்களிடமிருந்து நான் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை.
நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கிறீர்களா?
அதனால்தான் உங்கள் கண்களுக்கு அங்கிருந்த கோல்டன் டெம்பிள் தென்படவில்லை.
விரைவில் குணம் பெறுக. ஒரு வேளை அது கண்ணில் பட்டிருந்தால் சீக்கியரா எனவும் கேட்டிருப்பஈர்களோ?
நான் உலகத்திலுள்ள தர்கா,சர்ச் ,இந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தபோது எனக்கு பரிசாக வழங்கப் பட்டவைகளையும் நான் விலை கொடுத்து வாங்கியவைகளையும் எனது இல்லத்தில் பார்க்க முடியும்.
எம்மதமும் சம்மதம்
.ஒரு பாதுகாப்பு அதிகாரியின் விட்டுக்கு செல்கிற உணர்வு இப்படித்தான் இருக்கும்.
சின்ன வயதில் இருந்தே நான் கண்ணியமுடன் வளர்க்கப்பட்டிருக்கிறேன். எனது மகனும் என்னை பின் பற்றுவான் .
கோவில் இல்லாத இடங்களில் அங்கிருக்கிற தர்கா அல்லது சர்ச் அல்லது குருத்வாரா சென்று வழி படுகிறவன். புரிந்து கொள்க.”
மாதவனது பதிலுக்கு ஆதரவுகள் பெருகிக் கொண்டிருக்கின்றன.