ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை இன்று கைது செய்திருப்பதாகத் தெரிகிறது.
வீட்டுச்சுவர் எறிக் குதித்த சி.பி.ஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை காரில் கூட்டிக்கொண்டு போனார்கள். இதற்காக பல வகைகளில் அதிகாரத்தை பயன்படுத்தி நீதித் துறையை சாமர்த்தியமாக கையாண்டார்கள் என அரசியல் விமர்சிக்கிறார்கள்.
ஜாமீன் கிடைக்காதபடி அயோத்யா கேசை முன்னிருத்தி கில்லாடி வேலையெல்லாம் பண்ணியிருக்கிறார்கள்.மோடி-அமித்ஷா போட்ட திட்டத்தை வெற்றிகரமான நாடகமாக நடத்தி மிருக்கிறது சி.பி. ஐ.
பாராளுமன்றத்தில் பாஜகவை திணறடித்த சிறந்த பார்லிமெண்டேரியன் இன்று சிறைக்குள் என்கிறார்கள்.கைது செய்தியை இன்னும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்காவிட்ட்டலும் சுவர் எறிக் குதித்தது எதற்காகவாம்? கடைசியாக கிடைத்த செய்திப்படி கைது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.
கைதுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இரண்டு மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சருக்கு நிபந்தனை விதித்தது சர்வாதிகாரத்தையும் விஞ்சியது.