அமேதி .
அகில இந்தியாவுக்கும் தெரியும்.
ராஜீவ் காந்தி தனது தொகுதியை பா.ஜ.க.விடம் இழந்தது உலகமே அறிந்த ஒன்று.
அந்த தொகுதியில் ஜமோ போலீஸ் நிலையத்தில்….
ஒரு பெண் புகார் கொடுக்க சென்றார்.
ராகேஷ் சிங் என்கிற காவலர் “என்ன பிரச்னை?”
“ஐயா…இடப் பிரச்சினை! பொம்பளைங்கிறதால மிரட்டுறாங்க.!”.
“அப்படியா… இடத்தைப் பார்க்கணும். வாரேன் .நீ முன்னாடி போ!”என அந்த பெண்ணை அனுப்பி வைக்கிறார்.
இடத்தை சோதனை செய்த பின்னர் “சரி உனக்கு சாதகமாக கேஸ் எழுதிடுறேன். நீ என் ரூமுக்கு வந்து சமைச்சிக் கொடுத்திட்டு படுத்திட்டுப் போ!” என டிமாண்ட் வைக்கிறார்.
ஆனால் பிரச்னை பெரிதாகி அந்த காவலர் மீது விசாரணை நடக்கிறது.கைது செய்யப்பட்டிருக்கிறார்.