ரெண்டு வருஷமாச்சுங்க நடிகை ஸ்ரீ திவ்யா காணாமல் போய்!
சங்கிலி புங்கிலி கதவைத் திற என்கிற படத்தில் கடைசியாக கதவைத் திறந்தவர்தான் அப்படியே ஆந்திராவுக்கு போய் விட்டார்.
கடைசியாக கண்டு பிடித்திருப்பவர் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன் தான்.
விஜய் ஆண்டனி,நடிக்கும் படத்துக்கு கதாநாயகியாக நடிப்பதற்கு ஸ்ரீ திவ்யாவை அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். இந்த படத்தில் அல்லு சிரிஷ் என்கிற தெலுங்கு நடிகரும் நடிக்கிறார்..இரண்டு நாயகன்கள்.
டிசம்பரில் தொடங்கி அடுத்த ஆகஸ்டில் ரிலீஸ் என திட்டமிட்டு இறங்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்.