இயக்குநர் சமுத்திரக்கனி படம் என்றாலே சமூகம் சார்ந்த பிரச்னையைப் பற்றி சொல்லி அதற்குத் தீர்வும் சொல்லியிருப்பார்.
வீர வசனங்களை அல்லது பாடல் வரிகளை கைத்தட்டலுக்காக வைத்து விட்டு சமூகத்தை கடந்து செல்பவர் அல்ல. வெற்றுத் துப்பாக்கி இல்லை.
இன்றைய நிலையில் எது தேவைப்படுகிறதோ அதை முன்னதாகவே சிந்தித்து இருப்பாரோ என்னவோ தமிழ் மொழியை இனத்தை முன்னிறுத்தி தனது நாடோடிகள் 2 படத்தில் ஒரு அங்கமாக வைத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க குடும்பம் சார்ந்த படம் .நாட்டு நிகழ்வை கடக்க முடியாதல்லவா?
“அண்ணல் அம்பேத்கார் ,கர்மவீரர் காமராஜர்” என்கிற பெயர் ராணுவத்தின் கட்டளைச்சொற்கள் மாதிரி அமைந்து மாணவர்கள் மத்தியில் வியூகம் அமைக்கிறது. பெரியார் திடலில் கூடிய மாணவர்கள் கூட்டத்தில் ஊடுருவும் கருங்காலிகளை அடையாளம் காண அந்த பெயர்களை சசிகுமார் உரத்துச்சொன்னதும் ஏற்படும் மாற்றம் அருமை.
அந்த முன்னோட்டத்துக்கே உயிராக இருக்கிற காட்சி. திரு நங்கைகளை உயர்த்திப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.
இந்த முன்னோட்டத்திலேயே நமது விமர்சகருக்கு பிடித்த வசனம் “திருப்பி அடிப்போம்!”