இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சா அந்த நாப்பது ஏக்கர் நிலத்தை சூப்பர் ஸ்டார் வாங்கி இருப்பாரா?
தெலங்கானாவில் மலிவான விலைக்கு வாங்கிய நிலம். இயற்கை விவசாயம் செய்யனும்னு நெனச்சு வாங்கிப்போட்ட நிலம்.
பண்படுத்திக் கொண்டிருந்த போது கெட்ட நாத்தம்.பிண வாடை. விவசாயத் தொழிலாளர்கள் அதிர்ந்து போய் எங்கேருந்து வருதுன்னு தேட ஆரம்பித்த போது அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் இருந்து வருவதை கண்டார்கள்.
அங்கே ஒரு சவம்.எலும்புக்கூடாக கிடந்தது. செத்து ஆறு மாதம் ஆகி இருக்கலாம் என போலீசார் நம்புகிறார்கள்.
இதைப் பற்றி சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவுக்கு தெரிவித்து வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.