இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கிற படம் ‘மிக மிக அவசரம்.’
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக மாறி இருக்கிற படம். அமைதிப்படை.2 ,கங்காரு ஆகிய படங்களைத் தயாரித்த அனுபவம் இருக்கிறது. இவரது படைப்புதான் ‘மிக மிக அவசரம்’ இந்த படத்தில் நாம் தமிழர் சீமான், இ.ராமதாஸ்,போலீஸ் முத்துராமன் ஆகியோருடன் நாயகனாக அரிஸ் குமார்,நாயகியாக ஸ்ரீ பிரியங்கா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
பெண் போலீசாக நடித்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா.
எப்படி உணருகிறார். ?காக்கி உடை அனுபவம் எப்படி?
“பெண்கள் அன்றாடம் சந்திக்கிற பிரச்னைகளை வாய்விட்டு சொல்வதை விட அதை படமாக எடுத்துக் காட்டினால் மனதில் சட்டெனப் பதிந்துவிடும். ஆனால் அதை பதியும் வகையில் படமாக்க வேண்டும்.அதை டைரக்டர் சுரேஷ் காமாட்சி சார் சிறப்பாக செய்திருக்கிறார்.
அவர் என்னிடம் ஸ்கிரிப்டை கொடுத்ததும் நான் அந்த கதாபாத்திரம் சாமந்தியாகவே மாறி விட்டேன்.அந்த அளவுக்கு கேரக்டரின் தன்மை என்னை ஆட்கொண்டுவிட்டது. பெண் போலீஸ் என்றால் எத்தகைய அனுபவங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது?
இந்தப் படம் வந்த பிறகுதான் எத்தகைய கேரக்டர்களை நான் தேர்வு செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். நான் சாமந்தியாக மாறி விட்டேன்” என்கிறார் பிரியங்கா.