‘ஐ’படத்தின் இந்தி இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படம் உருவான விதம் குறித்து பேசுகையில்,, இந்தக் கதையை முதலில் உருவாக்கியது ரஜினிக்காகத்தான் “பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தக் கதையை உருவாக்கினேன். இந்தக் கதையைமுதலில் ரஜினியிடம் தான் சொன்னேன். ஆனால் அவரால் அப்போது அவரால் சில காரணங்களினால் நடிக்கமுடியவில்லை. 15 ஆண்டுகள் கழித்து இப்போது விக்ரமை வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளேன் . ‘ஐ ‘ ட்ரைலர் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை மிகவும் கவர்ந்துள்ளது அறிந்து மகிழ்கிறேன். ஆனால் அவரது ‘இணைய தள ‘ ட்வீட் பற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை,” என்றார். ராம் கோபால் வர்மா தனது டிவிட்டரில் ,’தமிழகத்தில் ரஜினி, ஜெயலலிதாவை விட பலம் மிக்கவர் ஷங்கர்’ என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது.