பிரகாஷ்ராஜ்க்கும் நமது பிரதமர் மோடிக்கும் ஏழாம் பொருத்தம்தான்.! கேட்கிற கேள்விகள் நியாயமாகவும் இருந்து தொலைத்துவிடும். மற்றவர்கள் கேட்க தயங்குவதை இவர் தைரியமாக கேட்டு விடுகிறார். ஒரு நம்பிக்கையில் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டார். வீட்டுக்குப் போப்பா நடிப்பை பாரப்பா என்று அனுப்பி வைத்து விட்டார்கள்.
நமது பிரதமர் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளுவதை பல மீடியாக்கள் பெரிதாகப் போட்டுள்ளன.
நடிகர் பிரகாஷ்ராஜும் கமென்ட் போட்டிருக்கிறார் அது சரியா ,தவறா?
“தலைவரை எப்படி கேமராமேனுடன் மட்டும் தனியாக அனுப்பி பிளாஸ்டிக் பாட்டில்களை அள்ள வைத்தார்கள்.?அவரது பாதுகாப்பு அதிகாரிகள் எங்கே போனார்கள்?வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்திருக்கிறபோது கடற்கரையில் எப்படி பிளாஸ்டிக் குப்பைகள் வந்தன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் என்ன?”
Where is our LEADERs security.. Why have you left him alone to clean with a CAMERAMAN following .. HOW dare the concerned departments have not cleaned the vicinity when a Foreign delegation is here .. ..#justasking pic.twitter.com/8rirZdzWXf
— Prakash Raj (@prakashraaj) October 12, 2019