ஆளும் கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேக்கிறதுக்கே காளை மாட்டுல பால் கறக்க வேண்டியிருக்கு.!
ஒரு குவாட்டர்,சிக்கன் பிரியாணி ,ஐநூறு தட்சணை வைக்கணும். இப்படி வச்சாதான் திடல்ல கூட்டத்தைப் பாக்க முடியும்.
ஒருத்தனோட ஜனநாயகக் கடமையை செய்ய வாங்கடான்னா “கையிலே ரெண்டாயிரம் வைப்பியா”ங்கிறான்.
“டே இது உன் கடமைடான்னா” ன்னு சொன்னா “அப்ப என்ன மசுத்துக்கு பணத்தை வெட்ரே”ங்கிறான்.
இதுதான்யா நம்ம பாரதமாதாவின் தமிழ்நாட்டுப் பிள்ளைகளின் கடமை உணர்ச்சி.
ஆனா அவனுக்குப் பிடிச்ச நடிகனோட படம்னா ஒரு டிக்கெட்டுக்கு கள்ள மார்க்கெட்ல ரெண்டாயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்குவான். இத கவர்மெண்டும் கண்டுக்காது.ஆனா கவர்மெண்டுக்கு பிடிக்காத நடிகன் படம்னா ரெய்டுதான். சூப்பர் ஸ்டார் படம்னா தியேட்டர்காரன் எவ்வளவுக்கு டிக்கெட் வித்தாலும் பலே பலே தான். அடிச்சு தூக்கு! அள்ளிக்கோ !
இப்படிப்பட்ட சூழ்நிலையிலதான் டைரக்டர் சீனுராமசாமி ஒரு ஐடியா கொடுத்திருக்கார்.
அது சின்னப்படமோ ,பெரிய படமோ தியேட்டருக்கு ஜனங்களை கொண்டு வர்றதுன்னா இப்படி பண்ணிப் பாருங்கன்னு சொல்லிருக்கார்.