ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு அதில் அமைதியுடன் குளிர் காய்கிற மனப்பான்மை கோலிவுட்டில் அதிகமாகவே இருக்கிறது.
சில நடிகர்கள் பின்னணியில் இருந்து கொண்டு தங்கள் ரசிகர்களை தூண்டி விடுவார்கள். தனது பெயரை முதலில் போட்டுவிட்டு மற்ற நடிகர்களின் பெயரை பின்னுக்குத் தள்ளிவிடுங்கள் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்ட நிகழ்வும் நடந்திருக்கிறது.
இத்தகைய சிக்கல்களில் சூர்யா-கார்த்தி சகோதரர்கள் செயல்பட்டது இல்லை.
தற்போது கார்த்தியின் கைதி படமும் தளபதி விஜய்யின் பிகில் படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகின்றன. பிகில் பெரிய பட்ஜெட் படம்.
கைதி ரிலீஸ் பற்றி நடிகர் கார்த்தி என்ன சொல்கிறார்?
“கைதிக்கு தேவையான தியேட்டர்கள் கிடைத்து விட்டன. பொதுவாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கலாம். பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவந்ததைப் போல தற்போது கைதியும் பிகிலும் வெளியாகின்றன” என்று பெருந்தன்மையாக சொல்லியிருக்கிறார்.