கங்கனா ரனாவத் நடிக்கப்போகிற தலைவி மற்றும் ஜெயா, ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போகிற கவுதம் வாசுதேவ மேனனின் வெப் சீரியல் இவைகளுக்கு தடை கேட்டு ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் நித்யா மேனன் நடிக்கவிருக்கும் ஜெயா பயோபிக் சேர்க்கப் படுமா என்பது தெரியவில்லை.
ஏ எல் .விஜய் இயக்கும் தமிழில் தலைவி, இந்தியில் ஜெயா,மற்றும் வெப் சீரியல் ஆகியவை தனது அனுமதி இல்லாமல் எடுக்கப்படுவதாக தீபா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஜெயலலிதா வாழ்க்கை விவரங்கள் தனக்குத் தெரியும். தனது வாழ்க்கையையும் சேர்க்க வேண்டும்.தங்களது குடும்ப அந்தரங்கம் பாதிக்கப்படக்கூடாது. ஜெயலலிதாவின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும் “என்று மனுவில் தீபா குறிப்பிட்டிருக்கிறார்.