உலகநாயகன் கமல்ஹாசனின் 65 வது பிறந்த நாள் விழா தமிழக அரசியல் வாதிகளுக்கு ,குறிப்பாக திமுக,அதிமுக ஆகிய இரு பெரிய திராவிடக் கட் சி களுக்கு விடுத்த சவாலாகவே அமைந்து விட்டது.
“சிறந்த அரசியல் ஆளுமைத்திறன் உள்ள தலைமை ‘-என்பதுதமிழகத்தில் வெற்றிடமாக இருக்கிறது என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கால நேரம் அறிந்து சொன்ன சொல்.திராவிட வட்டாரங்களில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது
ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இன்றைய அமைச்சர்களில் எத்தனை பேர் கட்டம் கட்டப்பட்டிருப்பார்கள் என்பது அந்தந்த மங்குனிகளுக்கே தெரிந்திருக்கும். எடப்பாடியே குலுக்கலில் கிடைத்திருக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதானே ! சாஷ்டாங்கமாக அத்தனை பேரையும் காலில் விழா வைத்த வலிமை அந்த பெண்மணிக்கு இருந்தது.
எடப்பாடி மேட்டரையும் ரஜினி சுட்டிக்காட்டி விட்டார். சுருக்கமாக சொல்லியிருந்தாலும் அதில்தான் எவ்வளவு அழுத்தம். அந்த அற்புதம் என்பது வரக்கூடிய தேர்தலில் அமைய விருக்கிற கூட்ணி யா?
‘இன்றும் அற்புதம்,அதிசயம் நடக்கிறது’ என்பது ‘உங்களின் நான் ‘ என்கிற கமலின் 60 ஆண்டு திரை உலக சாதனையில் நாளைய மாற்றம் பற்றி ரஜினி ஜாடையாகப் பேசியதா?
“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
ஆனால், அவர் முதல்வரானார். அதுக்கு அப்புறம் கூட இந்த அரசாங்க 20 நாள் தாங்காது, 2 மாசம் தாங்காது என்று சொன்னார்கள்.
அற்புதம் நடந்தது… இன்று வரையிலும் ஆட்சி கவிழாமல் தொடர்கிறது.
நேற்றும் அற்புதம் நடந்தது.
இன்றும் அற்புதம் அதிசயம் நடக்கிறது…
நாளையும்…… அற்புதம் நிகழும்”
மாற்றம் வேண்டும் என்பது மக்களின் விருப்பம் .
1967 ஆம் ஆண்டு நடந்த அரசியல் மாற்றம் 2021 -லும் நிகழ வேண்டும் என விரும்புகிறார்கள்.
ஒரு கணவன்,ஒரே மனைவி என்று வாழ்வதற்கு இது குடும்பம் இல்லை.
அரசாங்கம் .
ஆளுகிறவன் இம்சையாக இருந்தால் எடுத்தெறிந்துவிடுவர் .
இன்னும் எத்தனை காலம் தான் திராவிட அரசியல்வாதிகளை சுரண்ட விடமுடியும். இவர்களின் ஆட்சியில் ஆட்சியாளர்களும் லஞ்சமும் வளர்ந்து தான் கண்ட பலன்.
ஆகவே மாற்றம் வந்தாக வேண்டும் .
அது கமல்-ரஜினி கூட்டணியால் சாத்தியமாகலாம்.
கமலுடன் கூட்டணி சேருவதும் ,ஆட்சி அமைவதுமே ரஜினி சொன்ன அதிசயமும் ஆச்சரியமாக அமையலாம்.
“நாங்கள் கூட்டணி சேருவோமா என மோடிஜி கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். ஆனால் அற்புதம் நடந்தது.நேற்றும் நடந்தது.இன்றும் அற்புதம் அதிசயம் நடந்திருக்கிறது” என்று எதிர்வரும் காலங்களில் ரஜினி -கமல் கூட்டறிக்கை விட்டாலும் ஆச்சரியம் இல்லை.
கமலின் விழாவில் ரஜினிகாந்த் பேசியது பாஜக வட்டாரங்களிலும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
இந்த மனிதரை வைத்துத்தானே தமிழகத்தில் காலூன்ற நினைத்தோம் இந்த மனிதர் எனிமா கொடுக்கிறாரே என்கிற கலவரம் அங்கே தெரிகிறது.
கமல் ரஜினி கூட்டணி சேர்ந்து விட்டால் விஜய்யின் ஆதரவு இந்த அணிக்குத்தான் இருக்க முடியும் என்பது எஸ்.ஏ.சந்திர சேகரின் பேச்சை கவனித்தால் புரியும்.