“அரசியலுக்கு வந்தால் இவரால் முதல்வர் ஆக முடியும், முடியாது என்று இரு வேறு கருத்துகள்.
ஆனால் இவர் ஒரு டிசைடிங் பாக்டர் என்பதை திமுக அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் நம்புகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினி வலுவான சக்தி. இவருடன் கமலும் இணைந்து கொள்வாரேயானால் 1967 -ல் நிகழ்ந்த அதிசயம் மீண்டும் நிகழலாம் என மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
ரஜினிக்கு எதிராக “தமிழர் அல்லர்” என்று உருவாக்கப்படுகிற கருத்து சிதைந்து விட்டது..
அந்த அளவுக்கு இன , மான உணர்வு என்பதெல்லாம் ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைபட்டுகிடக்கின்றன.. ஈழத்து தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டபோது வராத இன ,மான உணர்வு ரஜினியை எதிர்ப்பதில் மட்டும் வந்து விடுமா என்ன?
எதையோ சொல்லவந்து எங்கேயோ போய்விட்டோம். ரஜினிக்கு வருவோம்.
அண்மையில் ‘தர்பார் ‘பட முன்னோட்டத்துக்காக மும்பை சென்றிருந்த சூப்பர் ஸ்டாரிடம் செய்தியாளர் ஒருவர் “அமிதாப்ஜி என்ன சொன்னார்?” என கேட்டார்.
ரஜினிகாந்த் சொன்ன பதில்…..
“தினமும் பயிற்சி செய். விட்ராதே ! வேலையில் கவனமாக இரு.! அரசியலை விட்டு தூரமா விலகி நில்லு.! இந்த மூன்றிலேயும் முதலிரண்டையும் என்னால் செய்ய முடியாது. மூணாவது சொன்னதை என்னால் ஏற்கமுடியாது. சூழ்நிலை, என்னை அரசியலுக்கு இழுத்திட்டு போயிருச்சு.! அரசியலுக்கு வரேன்.”
“வயது 70. இந்த வயதிலும் சினிமாவில் நடிக்கணுமா?”
“உண்மையை சொல்லனும்னா பணம். ! நடிக்கிறதுக்கு அதிகமாபெரிய தொகை தர்றாங்க !”
“உங்களுடைய ஆசை என்ன?”
“திருநங்கையாக நடிக்கணும்னு ஆசை.! இதுவரை நான் அந்த கேரக்டரை செய்யலே. !முருகதாஸ் மாதிரியான டைரக்டர்கள் முயற்சி செய்தால் முடியும் னு நம்புறேன்!”
இவ்வாறு மும்பையில் கேள்வி பதில் போயிருக்கிறது.
நமது படைப்பாளிகள் இனிமேல் திருநங்கைகளிடம் கதை கேட்கப் போய் விடுவார்கள் என நம்பலாம்.