ரொம்பவும் அட்வான்சா இருக்காங்க…இப்ப வர்ற நடிகைகள் சில உண்மைகளை மூடி மறைக்கிறதில்ல.
படு ஓப்பனாக இருக்காங்க. நிஜத்தை மறச்சி என்ன ஆகப் போகுது..பகிரங்கமா சொன்னா மனசில பாரமில்லாம இருக்கலாமே.!
வீணா நந்தகுமார் .மலையாள முன்னணி நடிகை.
இப்ப ‘கேட்டியோலானு எண்ட மலாக்கா ‘படத்தின் கதாநாயகி. படம் நல்லா ஓடுது. பொய்யா சக்ஸஸ் மீட் நடத்தவேண்டிய அவசியம் இல்லாம ஓடிருக்கு!
வீணாவின் மனசு ..இதோ பேசுது..!
“நான் ரொம்பவும் அதிகமா பேசுறேனோன்னு தோணுதா, அப்படின்னா ரெண்டு பெக் உள்ளே போயிருக்குன்னு அர்த்தம்.!அதுவும் ‘கல்ப் ‘ அடிச்சிருக்கேன் .ஆனா அதிகமா குடிக்கிற ‘கபாஸிட்டி ‘இல்ல. சமீபத்திலதான் இந்த பழக்கம்.! பீர் ரொம்பவும் பிடிக்கும். சில நேரங்களில் ஒரே பெக் போதும்.!
காதல் மேட்டர்ல எப்படி….நாலு பேரை லவ் பண்ணிருக்கேன் .ஆனா யாரும் சரிப்பட்டு வரல. நைசா கழட்டி விட்டுட்டேன்.” என்கிறார் வீணா.