ஸ்ரீ ரங்கத்து காக்கா என்றாலும் அது கோவிந்தா போடுமா …கா…கா.கா..ன்னுதான் கத்தும் .
அப்படி ஆகிப்போச்சு நித்தியானந்தாவின் கதையும்..!
பாலியல் ரீதியான வழக்கு ,மோசடி வழக்குன்னு நித்தியானந்தாவை துரத்திக்கிட்டு இருக்கு. இப்ப எங்கே இருக்கிறார் என்பதை நித்தியால் சொல்ல முடியல. அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. ஆனால் பாஜக அரசாங்கத்தின் கருணையினால் இன்னமும் பிடிபடாமல் இருக்கிறார் என்பதே உண்மை. மோடிஜியின் அரசாங்கத்தின் கருணை நித்தியானந்தாவின் மீது இருக்கிறது.
இந்திய குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் இயக்க கலைவர் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்திய போது நக்கலாக “எனக்கு இந்தியாவில் குடியுரிமை மறுக்கப்பட்டால் நித்தியானந்தாவின் கைலாச நாட்டுக்குப் போய் விடுவேன். அங்கு அதிபராக நித்தியானந்தா இருக்கிறார்” என்று சொன்னார்.
ஆனால் நித்தி எத்தனை பேரை பார்த்த ஆளு. விடுவாரா, அவரும் பதிலுக்கு சீமானை நையாண்டியாக “தமிழ்ப் பிரிவினைவாதிகள் வந்து தங்குவதற்கு கைலாசா ஒன்றும் திறந்த மடம் இல்லை. அரசியலை விட்டு விலகி பிறகு திருவண்ணாமலை போய் கிரிவலம் சுத்தி தீபம் ஏற்றி ,மதுரை மீனாட்சி அம்மனின் பாதம் வணங்கி வந்தால்தான் சீமானுக்கு கைலாசா சிட்டிசன்ஷிப் தரத் தயார்” என்பதாக சொல்லியிருக்கிறார்.
நாடு இருக்கிற துயரத்தில் இவர்களுக்கு நக்கலும் நையாண்டியும் பண்ண குடியுரிமை மசோதாதான் கிடைத்ததா?