என்னிக்குமே பக்கத்து வீட்டு மரத்து பழம்னா ஒரு டேஸ்ட்தான்.!
அருண் விஜய்,விஜய் ஆண்டனியை விட பாலிவுட் ரன்வீர் சிங்னா பளபளப்பு ,பார்ட்டி ஷோக்குன்னு திரியலாம்ல. மும்பைனாலே மோகம் அதிகம்தான். அதுக்கு ஷாலினி பாண்டே விதி விலக்கா? ஆனா பத்திரத்தில் கையெழுத்து போட்டு ஒப்பந்தம் ஆகி 27 நாள் நடித்துவிட்டு இனிமேல் நடிக்க மாட்டேன்னு அத்துக்கிட்டு ஓடினா காசு போட்ட முதலாளி சும்மா இருப்பாரா?
அதான் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கிரிமினல் கேஸ் போட்டு இருக்காரு ஷாலினி பாண்டே மேலேன்னு சொல்றாங்க.
விஷயம் இதாங்க.!
அக்னி சிறகுகள் படம் .நவீன் தான் இயக்குநர் .பேசப்படுகிற டைரக்டர். விஜய் ஆண்டனி,அருண் விஜய் ஆகியோரை வைத்து படம் எடுக்கப்படுகிறது. வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில ஷாலினி பாண்டேவுக்கு முக்கிய வேடம். இவருக்கு ரன்வீர் சிங் பட வாய்ப்பு வந்ததும் தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். படப்பிடிப்புக்கு வரவில்லை.
டி .சிவா எவ்வளவோ பஞ்சாயத்து பண்ணியும் அம்மணி இணக்கமா வரல. ஊருக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ணின சிவாவுக்கு சொந்த மேட்டர்ல தோல்வி. தமிழ்,தெலுங்கு படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிராது கொடுத்திருக்கிறார். இது போக கிரிமினல் வழக்கும் போட்டிருப்பதாக சொல்கிறார்கள்.