காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணா காதி எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டி பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். சிறிய ரக ஆயுதங்கள், மோட்டார் ரக குண்டுகள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு இந்திய தரப்பிலிருந்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.