அறுசுவை உணவுகள் அருகில்… அதுவும் தங்கத் தட்டுகளில் இருந்தும் ஆரோக்கியமான ஒருவர் அவைகளை உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்றால் அவர் வேறு யாராகவும் இருக்கமுடியாது.
சாட்சாத் பிரசாந்த் !
திறமைகள் எல்லாம் இருந்தும் அமைதிகாத்து வந்த நடிகர்.
இவரும் அருண் விஜய்யும் விட்ட வழியில்தான் புதியவர்கள் புகுந்து இருக்கிறார்கள். மற்ற முன்னணி நடிகர்களை போல தங்களை முன்னிலைப் படுத்தக்கூடிய கமர்ஷியல் கதைகளை இவர்கள் தேர்வு செய்து கொள்ளவில்லை.
ஆனால் தற்போதுதான் புதிய வழி திறந்திருக்கிறது.
அந்தாதூன் ..இந்தியில் பாக்ஸ் ஆபீஸ் படம். ஆயுஷ்மான் குரானாவுக்கு மார்க்கெட்டை உயர்த்திய படம் .இந்த படத்தின் உரிமையை வாங்க சில முன்னணி நடிகர்கள் முயன்றார்கள். ஆனால் முந்திக் கொண்டவர் தியாகராஜன்,மகனுக்காகவே வடிவமைக்கப்பட்ட கதை என நம்பியவர் அதற்கான இயக்குநரையும் இவர் தேர்வு செய்து விட்டார் என்கிறார்கள்.
அவர்தான் ஜெயம் ரவியின் அண்ணன் .எடிட்டர் மோகனின் மகன் மோகன்ராஜா .
இது சரியாக இருந்தால் பிரசாந்தின் மறு பிரவேசம் அதிரடியாக இருக்கும் .