கற்பழிப்பு வழக்கில் தேடப்பட்டு காணாமல் போனவர் நித்தியானந்தா .
கைலாசா என்கிற நாட்டுக்கு தன்னை அதிபதியாக அறிவித்துக் கொண்ட இவரை மாநில ,மத்திய அரசுகள் தேடிவருவதாக சொல்கின்றன.
அகில உலக தேடுதலும் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. .
ஆனால் எந்த செயற்கை நிலவின் கண்களிலும் நித்தியானந்தா படாமல் தனது சீடர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் அனுப்பிய செய்திகளும் வைரலாக அடிபட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
பெருஞ்சீனத்தையும் .பிற உலக நாடுகளையும் அச்சுறுத்துகிற கொரானோ வைரசுக்கு தன்னிடம் மருந்து இருப்பதாக சொல்கிறார்.
“48 மணி நேரம் “ஓம் நித்தியானந்த பரம சிவோகம் “என்கிற மகா வாக்கிய மந்திரத்தை இடைவிடாமல் உச்சரிக்க வேண்டும்!” என்பதாக சொல்லியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருக்கின்றன.