இன்று காதலர் தினம்.
காதலர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிற விக்னேஷ் சிவன் -நயன்தாரா இருவரும் மனமேடையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
மண மேடையை அவர்கள் அலங்கரிக்கும் நாள் எந்நாளோ என்கிற ஆர்வத்தில் மொத்த தென்னக திரையுலகமும் காத்திருக்கிறது.
இந்த நிலையில் தனது காதலர் தினப் பரிசாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அவரது இயக்கத்தில் ‘நானும் ரவுடிதான்’படத்தில் நடித்திருந்த மக்கள் செல்வன் விஜயசேதுபதி ,நயன்தாரா இருவரையும் அவரது புதிய படத்தில் நடிக்க வைக்கப்போகிறார்.
படத்தின் பெயர் ‘காத்துவாக்கிலே ரெண்டு காதல் ‘ இசை அனிருத். கூடுதல் கவர்ச்சி சமந்தா .தயாரிப்பு லலித்குமார்.
தலைப்பு சூப்பராக இருக்கிறது.!