
யார் யாருக்கோ சிலை அமைக்கும்போது பெற்றெடுத்த அம்மாவுக்கு சிலை திறப்பது தவறாகுமா?
தமிழ்நாட்டில் பிறந்தவர் விஜயநிர்மலா. இவரது அப்பா சவுண்டு என்ஜினியராக இருந்தவர். விஜயநிர்மலா ஏழு வயதாக இருந்தபோது அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி .ஆர்.மகாலிங்கத்தின் ‘மச்சரேகை ‘படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.அதன் பின்னர் அவரை மிகவும் பிரபலமாக்கியது கவியரசர் கண்ணதாசனின் “எலந்தைப் பயம் “பாட் டுதான்..
அதன் பின்னர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் காதல் மனைவியானார். இவருக்கு நரேஷ் என்கிற மகன் இருக்கிறார். இவர்தான் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளன்று அம்மாவின் முழு உருவ சிலையை அப்பாவை வைத்து திறக்க வைத்திருக்கிறார். விழாவின் கிருஷ்ணாவின் மகன் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும் கலந்து கொண்டார். இவர் கிருஷ்ணாவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்.
பெண் இயக்குநராகவும் விஜய் நிர்மலா 47 படங்களை இயக்கியிருக்கிறார். இதற்காக கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறார்.












